Last Updated : 27 Oct, 2024 04:35 PM

 

Published : 27 Oct 2024 04:35 PM
Last Updated : 27 Oct 2024 04:35 PM

சூர்யாவின் நாயகியாக மிருணாள் தாக்குர் ஒப்பந்தம்?

சூர்யாவுக்கு நாயகியாக நடிக்க மிருணாள் தாகூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 44’ படத்தினை முடித்துள்ளார் சூர்யா. அதனைத் தொடர்ந்து தனது 45-வது படத்தினை இயக்கும் பொறுப்பை ஆர்.ஜே.பாலாஜியிடம் கொடுத்துள்ளார் சூர்யா. இப்படத்தினை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

நவம்பரில் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தில் நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இறுதியாக மிருணாள் தாக்குரிடம் பேசியிருக்கிறார்கள். அவரோ படப்பிடிப்புக்கான தேதிகளை வைத்து தன்னுடைய தேதிகளை ஒதுக்கி தருவதாக கூறியிருக்கிறார். இப்போது படக்குழுவினரோ படப்பிடிப்புகான தேதிகளை முடிவு செய்து வருகிறது படக்குழு. விரைவில் அனைத்து பேச்சுவார்த்தையும் முடித்து மிருணாள் தாக்குர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்கிறார்கள். அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் படமாக ‘சூர்யா 45’ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x