Published : 18 Sep 2024 08:29 PM
Last Updated : 18 Sep 2024 08:29 PM

“அம்மாவுக்கு காட்டிய அன்பை எனக்கும் கொடுங்கள்” - தமிழில் பேசி ஜான்வி கபூர் நெகிழ்ச்சி

ஜான்வி கபூர்

சென்னை: “நீங்கள் என் அம்மா மீது காட்டிய அன்புதான் இன்று நானும், என்னுடைய குடும்பமும் இந்த நிலைமையில் இருக்க காரணம். அதற்காக நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். அதே அன்பை நீங்கள் எனக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்” என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்பபடம் ‘தேவரா’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஜான்வி கபூர் யாரும் எதிர்பாராத விதமாக தமிழில் சரளமாக பேசி அசத்தினார். அவர் பேசுகையில், “வணக்கம் உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னை எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னுடைய அம்மாவுடன் நான் இருந்த சிறப்பான தருணங்கள் அனைத்தும் சென்னையில் நிகழ்ந்தவை. நீங்கள் என் அம்மா மீது காட்டிய அன்பு தான் இன்று நானும், என்னுடைய குடும்பமும் இந்த நிலைமையில் இருக்க காரணம். அதற்காக நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். அதே அன்பை நீங்கள் எனக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். அதற்காக நான் கடுமையாக உழைப்பேன் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன். ’தேவரா’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார். பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகும் படம் ‘தேவரா’ என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x