Last Updated : 04 Sep, 2024 05:14 PM

 

Published : 04 Sep 2024 05:14 PM
Last Updated : 04 Sep 2024 05:14 PM

புதுச்சேரியில் அனைத்து தியேட்டரிலும் ‘தி கோட்’ - 4 நாள் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி!

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து திரையரங்குகளிலும் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் நாளை (செப்.5) வெளியாகிறது. நான்கு நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘தி கோட்’ திரைப்படம் நாளை (செப்.5) வெளியாகிறது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ரசிகர்கள் படத்தைக் கொண்டாட வேண்டும் என விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், ‘தி கோட்’ திரைப்படம் புதுவை நகரம், கிராமங்களில் உள்ள 15 திரையரங்குகளிலும் நாளை ரிலீஸாகிறது. சிறப்புக் காட்சிக்கு புதுச்சேரி அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதையடுத்து, நாளை முதல் வரும் 8-ம் தேதி வரை சிறப்பு காட்சிக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த 4 நாட்கள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சி என ‘தி கோட்’ திரைப்படம் தினமும் 5 காட்சிகள் புதுவையில் திரையிடப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x