Published : 02 Aug 2024 04:19 PM
Last Updated : 02 Aug 2024 04:19 PM

“ரஜினியுடனான சந்திப்பு ஒரு நாவல் வாசிப்பதை போல் இருந்தது” - இயக்குநர் நிதிலன்

சென்னை: “மகாராஜா திரைப்படம் உங்களுக்கு எந்த அளவுக்கு பிடித்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ந்தேன். உங்களின் விருந்தோம்பல் என்னை வியப்படைய வைக்கிறது” என ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வரை வசூலித்த ‘மகாராஜா’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து இயக்குநர் நிதிலன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சூப்பர் ஸ்டார் ரஜினி சார், உங்களுடனான இந்த அற்புதமான சந்திப்புக்கு நன்றி.

வாழ்க்கை, அனுபவம், வாழும் முறைகள் என கிட்டத்தட்ட ஒரு நாவலை வாசிப்பதை போல இருந்தது. உங்கள் விருந்தோம்பல் மற்றும் பணிவை கண்டு நான் வியப்படைகிறேன். மகாராஜா திரைப்படம் உங்களுக்கு எந்த அளவுக்கு பிடித்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ந்தேன். மீண்டும் ஒருமுறை நன்றி” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x