Published : 03 Jun 2024 08:01 PM
Last Updated : 03 Jun 2024 08:01 PM

“மூன்றாவது குழந்தை...” - நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சிப் பகிர்வு

சென்னை: தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும், குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கு தர வேண்டுகிறோம். நன்றி” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் என்று அவர் பொதுவெளியில் கலந்துகொண்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து ரசிகர்கள் கூறி வந்தனர். இதனை உறுதி செய்துள்ள சிவகார்த்திகேயன் மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x