Published : 08 Aug 2023 05:18 AM
Last Updated : 08 Aug 2023 05:18 AM

தூத்துக்குடியில் தொடங்கும் விஷால் பட ஷூட்டிங்

சென்னை: நடிகர் விஷாலின் 34-வது படத்தை ஹரி இயக்குகிறார். இன்னும் பெயிரிடப்படாத இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இப்போது 3 வது முறையாக அவருடன் இணைகிறார். இது, வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்க இருந்தது. அப்போது தொடங்கவில்லை. அடுத்து 22-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. சில காரணங்களால் அப்போதும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 11-ம் தேதி முதல் தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x