Published : 07 Aug 2023 04:25 PM
Last Updated : 07 Aug 2023 04:25 PM

‘லியோ’வுக்காக மீண்டும் காஷ்மீர் சென்ற லோகேஷ் கனகராஜ்

சென்னை: ‘லியோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின்போது விடுபட்ட சில காட்சிகளுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. அதன்பிறகு சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் மொத்தப் படப்பிடிப்பும் அண்மையில் நிறைவடைந்தாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பின்போது விடுபட்ட சில காட்சிகளுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளனர். இந்தப் படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’லியோ’ படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது ஓய்வுக்காக விஜய் வெளிநாடு சென்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x