Last Updated : 13 Dec, 2016 02:45 PM

 

Published : 13 Dec 2016 02:45 PM
Last Updated : 13 Dec 2016 02:45 PM

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பரத்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பரத் நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. தாகூர் மது தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

ராகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்து வருகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மேலும், தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. மேலும், இப்படத்தில் பரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பாடல் படப்பிடிப்பு மட்டுமே இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், "’துப்பாக்கி’ படத்தின் 2-ம் பாகமாக இருக்கும்" என படத்தின் தயாரிப்பாளர் தாகூர் மது தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x