Last Updated : 15 Dec, 2016 06:49 PM

 

Published : 15 Dec 2016 06:49 PM
Last Updated : 15 Dec 2016 06:49 PM

சாவித்திரியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து உருவாகவிருக்கும் படத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

'இரும்புத் திரை', தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் மற்றும் பொன்ராம் - சிவகார்த்திகேயன் இணையும் படம் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தார். இப்படங்கள் போக தெலுங்கில் 2 படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்நிலையில், மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி படமொன்றை இயக்க உள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின். இவர் பெரும் வரவேற்பைப் பெற்ற 'யவடு சுப்பிரமணியம்' படத்தின் இயக்குநர்.

இப்படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இது குறித்து சமந்தா தரப்பில் விசாரித்த போது, "பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். ஆனால், அதற்குப் பிறகு படக்குழு இன்னும் தொடர்பு கொள்ளவில்லை" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x