Published : 19 Dec 2019 03:37 PM
Last Updated : 19 Dec 2019 03:37 PM

ரவி அரசு இயக்கத்தில் சிவராஜ்குமார்?

ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் கன்னடப் படத்தில் நடிக்க சிவராஜ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அதர்வா நடித்த 'ஈட்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவி அரசு. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் நடித்த 'ஐங்கரன்' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சரியான வெளியீட்டுத் தேதிக்காகப் படக்குழு காத்திருக்கிறது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் ரவி அரசு. அந்தக் கதையின் நாயகனாக நடிக்க பல்வேறு நாயகர்களை அணுகினார். இறுதியில் ரவி அரசு கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார்.

கன்னடத்தில் உருவாகும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது தனுஷ் நடித்து வரும் 'பட்டாஸ்' படத்தைத் தயாரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கன்னடப் படத்தின் தயாரிப்பில் கவனம் செலுத்தவுள்ளது.

விரைவில் இந்தக் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. நாயகியாக நடிக்க ப்ரியா ஆனந்த்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படப்பிடிப்புக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x