Last Updated : 17 Aug, 2017 05:07 PM

 

Published : 17 Aug 2017 05:07 PM
Last Updated : 17 Aug 2017 05:07 PM

சிரஞ்சீவியுடன் உய்யலவாடா படத்தில் இணைகிறார் அமிதாப்

மும்மொழிகளில் தயாராகும் 'உய்யலவாடா' படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன் இணைந்து நடிக்க உள்ளார்.

ஆந்திரப் பிரதேசம், கர்னூலைச் சேர்ந்த பிரபல சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் 'உய்யலவாடா நரசிம்ம ரெட்டி'.

இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க, நடிகர் ராம் சரண் தயாரிக்கிறார். தெலுங்கு, கன்னடம், இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராகிறது.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமிதாப் நடிப்பது குறித்துப் படக்குழுவினர் கூறும்போது, ''அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதைத் தவிர, வேறு எந்தத் தகவல்களையும் தற்போது கூற முடியாது'' என்றனர்.

கடந்த ஜூன் மாதத்தில் தெலுங்கு திரையுலகின் ஜாம்பவான் தேசரி நாராயண ராவின் அஞ்சலிக்காக வந்திருந்த சிரஞ்சீவியின் 'உய்யலவாடா' படத் தோற்றம் இணையத்தில் வைரலானது.

சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22 அன்று, படத்தின் லோகோவும் மோஷன் போஸ்டரும் வெளியாக உள்ளது.

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் 'உய்யலவாடா' படம் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x