Last Updated : 20 Jan, 2017 03:04 PM

 

Published : 20 Jan 2017 03:04 PM
Last Updated : 20 Jan 2017 03:04 PM

தமிழகத்தின் உத்வேகத்துக்கு ஆதரவு தருகிறேன்: மகேஷ்பாபு

தமிழகத்தின் உத்வேகத்துக்கு ஆதரவு தருகிறேன் என்று இளைஞர்கள் போராட்டம் குறித்து மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இளைஞர்கள் போராட்டத்துக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு தன்னுடைய ஆதரவை அளித்துள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் உத்வேகம் ஜல்லிக்கட்டு - துணிச்சலான, அச்சமற்ற விளையாட்டு. தாங்கள் உண்மையாக நம்பும் ஒன்றுக்காக போராடும் தமிழர்களின் ஒற்றுமையைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.

முக்கியமாக, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதற்காக எப்படி குரல் கொடுக்கிறார்கள், தங்கள் வேர்களுக்காக, கலாச்சாரத்துக்காக எப்படி விடாது போராடுகிறார்கள் என்பதை மெச்சுகிறேன். அவர்களின் குரல் கேட்கப்படவேண்டும். தமிழகத்தின் உத்வேகத்துக்கு ஆதரவு தருகிறேன்" என்று தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x