Published : 03 Jan 2024 05:49 AM
Last Updated : 03 Jan 2024 05:49 AM

நிலநடுக்கத்தால் அதிர்ச்சி: ஜப்பானில் இருந்து திரும்பிய ஜூனியர் என்டிஆர் உருக்கம்

ஹைதராபாத்: ஜப்பான் நாட்டின் இஷிகாவா, நிகாடா உட்பட சில மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன் தினம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.6 -ஆக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஜப்பான் சென்றிருந்த ‘ஆர்ஆர்ஆர்’ நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பற்றி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள, ஜூனியர் என்டிஆர், “ஜப்பானில் இருந்து இன்று (திங்கட்கிழமை) வீடு திரும்பிவிட்டேன். அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்தேன். கடந்த வாரம் முழுவதும் அங்குதான் இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் அதிலிருந்து மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x