Published : 23 Aug 2023 06:46 PM
Last Updated : 23 Aug 2023 06:46 PM

சந்திரயான் 3 | “இதயம் பூரிக்கிறது; நிலவில் இந்தியா” - இஸ்ரோவை வாழ்த்திய திரையுலகம் 

சந்திரயான் 3 விண்கலம் மூலம் இந்தியா நிலவில் தடம் பதித்திருக்கும் நிலையில் திரையுலகினர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இயக்குநர் ராஜமவுலி தனது ட்விட்டர் பக்கத்தில், “இதயம் பெருமையால் பூரிப்படைகிறது. கண்ணீர் கன்னங்களில் வழிகிறது. சந்திரயான் 3 வெற்றிகரமான தரையிறக்கம் விண்வெளியில் புதிய சகாப்தம்” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் அக்ஷய்குமார்: “கோடிக்கணக்கான இதயங்கள் இஸ்ரோவுக்கு நன்றி செலுத்துகின்றன. நீங்கள் எங்களை பெருமைபடுத்தியுள்ளீர்கள். இந்தியா வரலாறு படைப்பதை பார்ப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நிலவில் இந்தியா. நாம் நிலவில் இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு: “விண்வெளி அறிவியலில் இந்தியா மிகப்பெரிய மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துகள்!!” என தெரிவித்துள்ளார்.

குஷ்பு: “இஸ்ரோ ஹீரோக்களுக்கு சல்யூட்” என குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாதவன்: “இந்த சாதனையை விவரிக்க வார்த்தைகளில்லை. என் இதயம் பெருமையால் ததும்கிறது” என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி: “இந்தியாவுக்கு மிக முக்கியமான சாதனை. இன்று வரலாறு படைக்கப்பட்டது” என சிரஞ்சீவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மோகன்லால்: "முழு தேசத்தையும் பெருமைப்படுத்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்" என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

சிலம்பரசன்: “நிலவில் வெற்றிகரமாக சந்திராயன் 3 விண்கலத்தை தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்தியர்கள் பெருமைகொள்ளும் வரலாற்று சிறப்பு மிக்க நாள். நட்சத்திரம், நிலவுக்கு அப்பால் உயரத்தை அடையமுடியும் என்ற நம்பிக்கையை கொடுத்த தருணமிது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x