Published : 22 Aug 2023 03:20 PM
Last Updated : 22 Aug 2023 03:20 PM

ஃபேன்டஸி கதைக்களத்தில் சிரஞ்சீவி - பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு

நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி அவர் அடுத்து நடிக்க உள்ள ‘சிரஞ்சீவி 157’ படத்துக்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபேன்டஸி கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது.

அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்திருந்தார். ‘போலா சங்கர்’ என தலைபிடப்பட்ட இப்படம் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவனதாக கூறப்படும் படம் ரூ.30 கோடி வசூலைத் தாண்டவே படாதபாடுபட்டது. படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களால் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி ஃபேன்டஸி கதைக்களம் கொண்ட புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் வசிஷ்டா இயக்குகிறார். சிரஞ்சீவியின் கரியரில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகிய பஞ்சபூதங்கள் நட்சத்திரத்துக்குள் அடைப்பட்டிருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இப்படத்துக்கான அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தெலுங்கு சினிமாவில் ஃபேன்டஸி படங்கள் அரிதாக வெளியாகும் சூழலில் சிரஞ்சீவியின் இந்த முயற்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x