Published : 05 Oct 2017 08:34 AM
Last Updated : 05 Oct 2017 08:34 AM

நாளை நாக சைதன்யா - சமந்தா திருமணம்: 150 பேருக்கு மட்டுமே அழைப்பு

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தாவின் திருமணம் கோவாவில் நாளை நடைபெற உள்ளது. இந்த திருமணத்துக்கு 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் ‘ஏம் மாய சேஸாவே’ (தமிழில், விண்ணைத் தாண்டி வருவாயா) எனும் படத்தில் முதன்முறையாக நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலிக்க தொடங்கினர். அதன் பின்னர் இந்த ஜோடி, மேலும் 3 படங்களில் நடித்தனர். இதனால் இவர்களது காதல் வளர்ந்தது. ஆனால் வழக்கம்போல் ‘நாங்கள் காதலிக்க வில்லை’ என கூறி வந்தனர். இந்த விஷயம் இரு வீட்டாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. பின்னர் இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது திருமணம் நாளை கோவாவில் இந்து முறைப்படியும், மறுநாள் 7-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெற உள்ளது. இந்த திருமணத்துக்காக நடிகர் நாகார்ஜுனா, அவரது மனைவி நடிகை அமலா மற்றும் இவர்களது நெருங்கிய உறவினர்கள் கோவா சென்று அங்கு திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கோவாவில் பிரசித்தி பெற்ற ‘டபிள்யூ’ எனும் நட்சத்திர ஓட்டலில் இந்தத் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஓட்டலில் ஒரு அறைக்கான தினசரி கட்டணம் ரூ.16 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை என கூறப்படுகிறது. இந்த திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 150 பேரை மட்டுமே அழைத்துள்ளதாக நடிகர் நாகார்ஜுனா ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருமணம் முடிந்த பின்னர் ஹைதராபாத்தில் வெகு விமரி சையாக திருமண வரவேற்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.10 கோடி வரை செலவு செய்ய உள்ளனர். இந்த செலவை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவர் மட்டுமே ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x