Published : 04 May 2023 08:30 AM
Last Updated : 04 May 2023 08:30 AM

என்ன ஒரு அற்புதமான சீரிஸ்! - ‘ஜூபிளி’ தொடருக்கு கங்கனா புகழாரம்

என்ன ஒரு அற்புதமான தொடர்! - ‘ஜூபிளி’ தொடருக்கு கங்கனா புகழாரம்

அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ‘ஜூபிளி’ வெப் தொடருக்கு நடிகை கங்கனா ரனாவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள தொடர் ‘ஜூபிளி’. அபர்சக்தி குர்ரானா, சித்தாந்த் குப்தா, வாமிகா கேபி உள்ளிட்டோர் நடித்துள்ள இத்தொடர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்திய தாக்கம் குறித்து இந்தி சினிமா வரலாற்றுப் பின்னணியில் கற்பனை கலந்து இத்தொடர் பேசுகிறது. அமித் திரிவேதி இசையமைத்துள்ள இத்தொடர் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில், ‘ஜூபிளி’ தொடருக்கு நடிகை கங்கனா ரனாவத் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது:

என்ன ஒரு அற்புதமான தொடர்! இந்தி சினிமாவின் பொற்காலம், தேசப் பிரிவினையின் சாம்பலில் விதைக்கப்பட்டது. இத்தொடரின் கதாபாத்திரங்கள் அந்த காலகட்டத்தின் மிகச்சிறந்த கலைஞர்களை நினைவூட்டுகின்றன. நம் நினைவுகளில் இன்று வரை தங்கியிருக்கும் அந்த பொற்காலத்தின் கதைகளை இத்தொடர் புதுப்பிக்கிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர்.

ஒவ்வொரு துறையும் அற்புதமாக செயல்பட்டுள்ளனர். ஆடை அலங்காரம் முதல் செட் வரை, இசை முதல் மேக்கப் வரை அனைத்தும் வியத்தகு திரை அனுபவத்தை கொண்டு வருகின்றன.

தங்களது அற்புதமான நடிப்பு மற்றும் மின்னும் ஆற்றலால் திரையை அதிர விட்ட இரண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. திரைத் துறையில் புதிய திறமைகள் தான் தேவை. வாமிகா கேபி மற்றும் சித்தாந்த் குப்தா இருவரையும் வரவேற்கிறேன்.

இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x