Published : 02 Apr 2015 07:31 AM
Last Updated : 02 Apr 2015 07:31 AM

‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ படத்தின் தலைப்பை மாற்றி விடுகிறோம்: உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி

மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ இந்திப் படத்தின் தலைப்பை மாற்றி விடுகிறோம் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதி மன்றத்தில் உறுதி அளித்தது. இதைத்தொடர்ந்து இப்படம் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த வர்ஷா என்ற நிறுவனம், ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் இந்தி திரைப்படத்தைத் தயாரித் துள்ளது. இதை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான மனுவில், “இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றத்தை பிரதிபலிக்கும் விதமாக கதா பாத்திரம் அமைந்துள்ளது. அத்துடன் ஒழுங்கீனமற்ற முறை யில் ரஜினி கதாபாத்திரம் சித்த ரிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் அவருக்கு உள்ள மரியாதை, நற்பெயர் ஆகிய வற்றுக்கு களங்கம் ஏற்படுத் தும் வகையில், இத்திரைப் படத்தை வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. எனவே, இத் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப் பட்டிருந்தது.

இவ்வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த உயர்நீதி மன்றம், ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் படம் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, வர்ஷா தயாரிப்பு நிறுவனம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ரஜினிகாந்தின் பெயர், தோற் றம், வசன உச்சரிப்பு போன்றவை களைப் பயன்படுத்த மாட் டோம் எனவும், ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தின் தலைப்பை மாற்றுவதாக வும் தயாரிப்பாளர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள் ளது. மனு தாரரின் உத்தரவாதம் பதிவு செய்யப்படுகிறது. தலைப்பை மாற்றுவது உட்பட பல் வேறு நடவடிக்கைகளை மேல் முறையீட்டாளர் 10 நாள்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இவ்வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதால் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x