Last Updated : 29 Aug, 2017 03:07 PM

 

Published : 29 Aug 2017 03:07 PM
Last Updated : 29 Aug 2017 03:07 PM

எனக்கு சவால்கள் பிடிக்கும்: ஹ்ரித்திக் ரோஷன்

தனக்கு இயக்குநராகும் ஆசை இருக்கிறதென்றும், சவால்கள் தனக்கு பிடிக்கும் என்றும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

மனநலம் குன்றிய கதாபாத்திரம், பார்வையற்ற கதாபாத்திரம் என பல்வேறு வேடங்களில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ளார். இயக்குநராகவும் ஆசை இருக்கிறதா என்று கேட்டதற்கு, ஆம் என்று பதிலளித்துள்ளார்.

செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கு நடிப்பு பிடிக்கும். அதில் எனக்கு ஆர்வம் அதிகம். எதிர்காலத்தில் ஒருநாள், இதுதான் இயக்குநராக சரியான நேரம் என தோன்றினால் அதை நான் செய்வேன். நான் சவால்களை விரும்பும் ஒருவன்.

நான் நடிக்க வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பிப் பார்க்கும்போது பல நினைவுகள் இருக்கின்றன. துறையில் நான் செலவழித்த நேரம் எனக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளன. இன்று நான் இருக்கும் நிலைக்கு, அந்த வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன. நான் நடித்த ஒவ்வொரு கணத்தையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்." என்றார்.

பாலிவுட் புது கட்டத்தை பார்த்துவருகிறதா, அறிவுரை சொல்லும் படங்கள் நிறைய வந்துகொண்டிருக்கிறதா என்று கேட்டதற்கு, "இந்திய சினிமா உலகிலேயே மிகப்பெரிய துறை. பல வருடங்களைக் கடந்து தனித்துவமாக விளங்கி வருகிறது.

இந்தியாவில் சினிமாதான் மிகப்பெரிய பொழுதுபோக்கு வடிவம். மக்களிடையே அதிக தாக்கத்தையும் கொண்டுள்ளது. இன்றைய நாளில், ரசிகர்களுக்கு நல்ல அறிவுரை சொல்ல, திரைப்படங்கள் தான் சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கிறத என நான் நினைக்கிறேன்."

இவ்வாறு ஹ்ரித்திக் பதிலளித்துள்ளார். .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x