Last Updated : 14 Aug, 2017 05:16 PM

 

Published : 14 Aug 2017 05:16 PM
Last Updated : 14 Aug 2017 05:16 PM

இந்தியில் அறிமுகமாகும் துல்கர் சல்மான்

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகைத் தொடர்ந்து, இந்தியிலும் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் துல்கர் சல்மான்.

மலையாளத் திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தமிழில் 'ஓ காதல் கண்மணி', 'வாயை மூடி பேசவும்' உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

தற்போது இந்தியிலும் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் துல்கர் சல்மான். இதில் இர்பான் கான், மிதிலா பார்க்கர் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரோனி ஸ்குரூவலா தயாரிக்கவுள்ள இப்படத்தை ஆகாஷ் குர்னா இயக்கவிருக்கிறார்.

பெங்களூருவில் வாழும் இளைஞர் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சோலோ' வெளியீட்டிற்காக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x