Published : 15 Apr 2025 08:32 AM
Last Updated : 15 Apr 2025 08:32 AM

காரை வெடிக்க வைத்​து கொல்​வோம்: சல்​மான் கானுக்கு மீண்​டும் மிரட்​டல்

மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்​மான் கான். இவர் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்​தானுக்​குப் படப்​பிடிப்​புக்​குச் சென்​ற​போது, அரிய வகை மான்​களை வேட்​டை​யாடிய​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

பிஷ்னோய் இன மக்​கள், அந்த அரிய​வகை மான்​களைப் புனித​மாகக் கருதுகின்​றனர். இதனால் பிஷ்னோய் சமூகத்​தைச் சேர்ந்த கேங்​ஸ்​டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பல், சல்​மான்​கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்​டல் விடுத்து வரு​கிறது.

மும்பை பாந்த்​ரா​வில் உள்ள சல்​மான் கானின் வீட்​டுக்கு வெளி​யே, கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் துப்​பாக்​கிச் சூடு நடத்​தப்​பட்​டது. இது அப்​போது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இந்த சம்​பவம் முடிந்து ஒரு வருடம் நிறைவடை​யும் நிலை​யில், மும்பை வொர்​லி​யில் உள்ள போக்​கு​வரத்​துத் துறை​யின் வாட்ஸ் அப் உதவி எண்​ணுக்கு ஒரு மெசேஜ் வந்​துள்​ளது.

அதில், சல்​மான் கானின் காரை வெடிகுண்டு வைத்து தகர்ப்​போம் என்​றும் வீட்​டுக்​குள் புகுந்து அவரை கொல்​வோம் என்​றும் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது. மும்பை போலீ​ஸார் இது தொடர்​பாக வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x