Published : 18 Oct 2024 04:43 AM
Last Updated : 18 Oct 2024 04:43 AM

சல்மான் கானை கொல்ல சதி: பிஷ்னோய் கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

மும்பை: நடிகர் சல்மான் கானை கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த ஒருவரை நவி மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டின் மீது ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இது தொடர்பாக சல்மான் கானை கொலை செய்ய சதி செய்ததாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த 18 பேர் மீது நவி மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த சுகா (எ) சுக்பீர் பல்பீர் சிங்கைஹரியானாவின் பானிபட்டில் மும்பைபோலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாகிஸ்தானில் உள்ள டோகர்என்பவருடன் சுக்பீர் சிங் தொடர்பில் இருந்து வந்துள்ளார். சல்மான் கானை கொலை செய்யபாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ள துப்பாக்கிகளை பயன்படுத்த பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டுள்ளது. பாபா சித்திக் கொலை தொடர்பாகவும் சுக்பீர் சிங்கிடம் விசாரிக்க உள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x