ஜி.வி.பிரகாஷ்குமார் | கோப்புப்படம்
ஜி.வி.பிரகாஷ்குமார் | கோப்புப்படம்

கோவையில் ‘பிளாக் மெயில்’ கடைசிக்கட்ட படப்பிடிப்பு

Published on

அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன், அடுத்து உதயநிதி நடித்த ‘கண்ணை நம்பாதே’ படத்தை இயக்கினார். இந்தப் படம் மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் இயக்கும் படம், ‘பிளாக்மெயில்’.

இதில், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். அவர் ஜோடியாக தேஜு அஸ்வினி நடிக்கிறார். பிந்துமாதவி, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்கிறனர். டி.இமான் இசை அமைக்கிறார். ஜெயக்கொடி பிக்சர்ஸ் சார்பில் அமல்ராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு கோவையில் மே 14-ம் தேதி தொடங்குகிறது. அங்கு பரபரப்பான ஆக்‌ஷன் காட்சியையும் சில வசனக் காட்சிகளையும் படமாக்க இருக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in