Published : 23 Feb 2023 06:49 AM
Last Updated : 23 Feb 2023 06:49 AM

பாலிவுட் நடிகைகள் சம்பளம் - தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா என்ற நிலை மாறி, இப்போது அனைத்து மொழிக்குமான பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. இதனால், கதாநாயகர்கள் தங்கள் சம்பளத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.

அதே போல கதாநாயகிகளும் இப்போது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி உள்ளனர். பிரபல இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிக்க ரூ.5 கோடி கொடுத்துள்ளனர். அது சின்ன கதாபாத்திரம் என்றாலும் அவ்வளவு தொகை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கியாரா அத்வானிக்கு ரூ.4 கோடி சம்பளம்.

பிரபாஸ் ஜோடியாக ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடிக்கும் கீர்த்தி சனோனுக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க இருக்கிறார். அவர் ரூ.5 கோடி சம்பளம் கேட்டதாகவும் பிறகு ரூ.4 கோடிக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தீபிகா படுகோன், ‘புராஜக்ட் கே’ படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ரூ.18 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி திரைப்பட கதாநாயகிகளின் சம்பளம் இப்படி அதிகரித்துள்ளதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x