Published : 10 Jan 2023 01:57 PM
Last Updated : 10 Jan 2023 01:57 PM

ஜன.13 முதல் 16 வரை ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தடை

வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்கு ஜனவரி 13 முதல் 16 வரை அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சினிமா மற்றும் நீர்ப்பாசனத்துறை இணை ஆணையர் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஜனவரி 13, 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களை அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு சிறப்புக் காட்சிகளாக வெளியிட தடை விதிக்கப்படுகிறது. தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

திரையரங்கு நுழைவு வாயில்களில் ரசிகர்கள் தங்கள் நாயகர்களுக்கு பேனர் கட் அவுட் வைத்து, அதற்கு பாலாபிஷேகம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது. டிக்கெட்டுகளின் பின்புறம் திரையரங்குகளில் ஏதேனும் பிரச்சினை தொடர்பான புகாருக்கான உயரதிகாரியின் பெயர், செல் நம்பர், இமெயில் முகவரி அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட அதிகமான டிக்கெட் கட்டணம், பார்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x