Last Updated : 06 Nov, 2022 03:54 PM

 

Published : 06 Nov 2022 03:54 PM
Last Updated : 06 Nov 2022 03:54 PM

எங்கள் வாழ்க்கையின் அற்புதமான செய்தி இது - ஆலியாபட் - ரன்பீர்கபூருக்கு பெண் குழந்தை 

பாலிவுட் நடிகர்கள் ரன்பீர்கபூர் - ஆலியாபட் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பாலிவுட் நடிகர்களான ரன்பீர்கபூரும், ஆலியாபட்டும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நிலையில், திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார் ஆலியா.

இந்நிலையில், மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இந்த நட்சத்திர ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எங்கள் வாழ்க்கையின் அற்புதமான செய்தி இது. ஒரு மேஜிக்கல் பெண் குழந்தை அவள்; நாங்கள் அன்பால் பூரிப்படைகிறோம். ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர் நாங்கள்'' என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x