Published : 20 Oct 2022 02:52 PM
Last Updated : 20 Oct 2022 02:52 PM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பட்டாசு வெடிப்பதை விட, திரையரங்குகளுக்குச் சென்று தீபாவளியையொட்டி வெளியான படங்களை பார்ப்பது தான் ரசிகர்களுக்கு பெரும் ஆவலை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படமும், கார்த்தி நடிப்பில் 'சர்தார்' திரைப்படமும் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரசிகர்கள் தீபாவளிக்கு வெளியாகும் படங்களை கண்டு ரசிக்கும் வகையில் தமிழக அரசு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்துள்ளது. முன்னதாக சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 7 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையரங்குகளில் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment