Published : 05 Aug 2024 03:30 PM
Last Updated : 05 Aug 2024 03:30 PM

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ -  டிசம்பர் ரிலீஸ்!

சென்னை: அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படம் முன்கூட்டியே தெரிவித்தபடி டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் டிசம்பருக்கு ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே நடிகர் அல்லு அர்ஜூனுக்கும் - இயக்குநர் சுகுமாருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பில் சுணக்கம் நிலவி வருவதாக தகவல் வெளியானது. இதனால் படம் டிசம்பர் மாதம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆக்‌ஷன் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும், இது படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் படம் டிசம்பர் 6-ம் தேதி சொன்னபடி வெளியாகும் என்பதையும் படக்குழு உறுதி செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x