Published : 13 Jun 2024 06:26 AM
Last Updated : 13 Jun 2024 06:26 AM

மீண்டும் இணையும் சுந்தர்.சி, வடிவேலு

சுந்தர். சி இயக்கத்தில்கடந்த மாதம் வெளியான ‘அரண்மனை 4’ ஹிட்டானது. இதில் தமன்னா, ராஷி கன்னா, சந்தோஷ் பிரதாப், யோகிபாபு, கோவை சரளா என பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியிலும் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இயக்குநர் சுந்தர். சி, ‘கலகலப்பு’ படத்தின் 3-ம் பாகத்தை இயக்க இருக்கிறார். இதில் விமல், சிவா ஹீரோக்களாகவும் வாணி போஜன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் ஆக் ஷன் காமெடி கதை ஒன்றை அவர் இயக்க இருக்கிறார். அதில் அவரும் வடிவேலுவும் ஹீரோக்களாக நடிக்க இருப்பதாகவும் தமன்னா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x