Published : 28 May 2024 08:47 AM
Last Updated : 28 May 2024 08:47 AM

‘சலார் 2’ நிறுத்தமா? - படக்குழு விளக்கம்

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் ,‘கேஜிஎஃப்’ படங்களுக்குப் பிறகு இயக்கிய படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்த இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உட்பட பலர் நடித்தனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் கடந்த வருடம் டிச.22-ல் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் அள்ளியது. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், பிரபாஸுக்கும் இயக்குநர் பிரசாந்த் நீலுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் ‘சலார் 2’ நிறுத்தப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இதற்குப் பதிலளித்துள்ள படக்குழு, பிரபாஸும், பிரசாந்த் நீலும் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘அவர்களால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x