Published : 06 Nov 2023 05:37 AM
Last Updated : 06 Nov 2023 05:37 AM

தமிழில் வருகிறது ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ 4ம் பாகம் 

சென்னை: ‘பிளானட் ஆப் தி ஏப்ஸ்’ பட வரிசையின் நான்காவது பாகம், ‘கிங்டம் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. வெஸ்பால் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஓவன் டீக், ஃப்ரேயா ஆலன், கெவின் டுராண்ட் , பீட்டர் மேகன் ஆகியோர் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு உருவமும், குரலும் கொடுத்துள்ளனர்.

இந்தப் பாகத்தில் மனிதர்களிடம் தனது ராஜ்யத்தை இழந்த ஏப்ஸ்கள். அவர்களுக்கு அடிமையாக வேலை செய்கின்றன. அவர்களிடம் இருந்து விடுதலை அடைந்து தங்கள் சாம்ராஜ்யத்தை மீண்டும் எப்படி நிறுவுகிறார்கள் என்பது கதை. தற்போது இதன் டிரெய்லர் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் இந்தப் படம் தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x