Published : 31 Jul 2023 05:13 AM
Last Updated : 31 Jul 2023 05:13 AM

துல்கருடன் இணைந்து படம் தயாரிப்பது ஏன்? - நடிகர் ராணா விளக்கம்

ஹைதராபாத்: நடிகர் ராணா, துல்கர் சல்மானுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘காந்தா’. இதை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

“நல்ல சினிமாவின் சக்தியை நினைவூட்டும் வகையில் சிறப்பான கதையைக் கண்டறிவது அரிதான காரியம். ‘காந்தா’ அதுபோன்ற கதை தான். இதுதான் எங்களை இணையச் செய்திருக்கிறது. இந்தப் பயணத்தைத் துவங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்” என ராணா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x