Published : 24 Jul 2023 07:29 PM
Last Updated : 24 Jul 2023 07:29 PM

‘லியோ’ படப்பிடிப்பு நிறைவு - ஓய்வுக்காக வெளிநாடு புறப்பட்ட விஜய்

சென்னை: ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார். அடுத்து அவர் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ‘லியோ’ படத்தின் தொடர் படப்பிடிப்புகளுக்குப் பிறகு நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x