Published : 03 Jun 2022 07:40 AM
Last Updated : 03 Jun 2022 07:40 AM

எடப்பாடியில் 10-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம்: எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 10-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எடப்பாடி பகுதியைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 10-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிச் சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் , கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

முகாமில், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x