Published : 20 Apr 2022 06:45 AM
Last Updated : 20 Apr 2022 06:45 AM

நாமக்கல்லில் 22-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இதன்படி வரும் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டு நேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.

முகாமில் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட், மேலாளர், கணக்காளர், காசாளர் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர் என அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாம் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x