Published : 21 Mar 2022 07:32 AM
Last Updated : 21 Mar 2022 07:32 AM

கோவை: சுகாதாரத்துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு திட்டங்களின் மூலம் 5 ஆர்பிஎஸ்கே பார்மசிஸ்ட், தலா ஒரு ஆடியோலஜிஸ்ட், ஆடியோ மெட்ரிக் அசிஸ்டன்ட், இன்ஸ்ட்ரக்டர் ஃபார் யங் ஹியரிங் இம்பேர்ட், 2 மல்டிபர்பஸ் ஹெல்த் வொர்கர், 3 எம்எம்எயு கிளீனர் கம் அட்டன்டர், 2 டென்டல் அசிஸ்டென்ட் போன்ற பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதுகுறித்த விவரங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். விருப்பமுள்ளவர்கள் கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை வரும் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் ரேஸ்கோர்ஸில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். நேர்காணல் வரும் ஏப்ரல் 4-ம் தேதி காலை 10 மணிக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x