Published : 16 Mar 2022 04:15 AM
Last Updated : 16 Mar 2022 04:15 AM

நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறையில் காலிப்பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர் நிலையில் 11 பணியிடங்கள் மற்றும் 2 இரவுக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக் காவலர் பணியிடங்களுக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு 34 வயதுக்குள்ளும் மற்றவர்களுக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் பூர்த்திசெய்யப்படும்.

விண்ணப்பங்கள் namakkal.nic.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்டஆட்சியர், வருவாய்த் துறை (அ-பிரிவு, முதல் தளம்), மாவட்டஆட்சியர் அலுவலகம், நாமக்கல் - 637 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x