Published : 15 Oct 2024 06:34 AM
Last Updated : 15 Oct 2024 06:34 AM

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வாய்ப்பு: நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை. ராணிப்பேட்டை, வேலூர்மாவட்டங்களில் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த 8 மாவட்டங்களில் செயல்படும் தனியார் நிறுவனநிர்வாகிகள் சமூகப் பொறுப்புணர்வுடன் தங்களது நிறுவனங்களில் உள்ள பணிகளில் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய ஏதுவாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து பணி வாய்ப்பு வழங்கி உதவ வேண்டும். அதற்கு ஏற்றவாறு ‘https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdp__PDD3mMyfvLO5-o3KDBHUNldCzDjTuI5p-b7NQqZ2b7oA/viewform?usp=sf_link’ இணைப்பில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x