Published : 09 Jul 2024 07:02 PM
Last Updated : 09 Jul 2024 07:02 PM

சென்னையில் யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி - விண்ணப்பிக்க ஜூலை 12 கடைசி நாள்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னை அசோக் நகர் குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமி சார்பில் யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வரும் ஜூலை 12-ம் தேதி கடைசி நாளாகும்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை அசோக் நகர் ஆஞ்சநேயர் பக்தசபா அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் குரு விருக்‌ஷா ஐஏஎஸ் அகாடமி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்து வரும் யுபிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்க இருக்கிறது. பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இணைந்து பயனடையலாம். சிறந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள், வாராந்திர, மாத, ஆண்டு மாதிரி தேர்வுகள், வசதியான ஸ்டடி ஹால், தேவையான நூல்களைப் பயன்படுத்த நூலகம், இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதங்கள் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பயிற்சியில் சேர இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 12, போட்டித் தேர்வுக்கான தேதி ஜூலை 14. போட்டித் தேர்வு பாடத்திட்டம் மே 2023 முதல் மே 2024 வரையிலான நடப்பு நிகழ்வுகளில் (current affairs) இருந்து கேள்விகள் கேட்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9363923451 மற்றும் 9500481074 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், இப்பயிற்சியில் சேர https://forms.gle/wr9eyHeoKmRy6Etw5 இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x