Published : 09 Jan 2024 06:20 AM
Last Updated : 09 Jan 2024 06:20 AM

உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு 18-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

சென்னை: உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு 18-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செயலாளர் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் செப்.14-ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், உதவி சிறை அலுவலர் பதவிகளுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜன.18-ம்தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x