Published : 01 Jun 2023 06:48 PM
Last Updated : 01 Jun 2023 06:48 PM

சென்செக்ஸ் 193 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 193 புள்ளிகள் (0.31 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 62,428 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் (0.25 சதவீதம்) சரிவடைந்து 18,487 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றித் தொடங்கி சீரடையத் தொடங்கியது. காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 36.12 புள்ளிகள் உயர்வடைந்து 62,658.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.35 புள்ளிகள் உயர்ந்து 18,575.75 இருந்தது.

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்பான வாக்கெடுப்பு நிறைவேற்றம், எதிர்பார்த்ததைவிட நான்காவது காலாண்டின் ஜிடிபி உயர்வுகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்களின் லாபத்தை நோக்கிய நகர்வால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 193.70 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 62,428.54 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46.65 புள்ளிகள் சரிவடைந்து 18,487.75 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், விப்ரோ, நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனானஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, டைட்டன் கம்பெனி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், எம் அண்ட் எம் பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசூகி, இன்போசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x