பங்குச்சந்தை | சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 145 புள்ளிகள் உயர்வடைந்து 62,108 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 18,371 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:43 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 175.46 புள்ளிகள் உயர்வடைந்து 62,139.14 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 65.25 புள்ளிகள் உயர்ந்து 18,379.65 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகள் கலவையான போக்குகள் நிலவியபோதிலும் இன்றைய ஏற்றத்துடன் தொடங்கியது. நிதி மற்றும் உலோகப்பங்குகள் லாபத்திற்கு வழிவகுத்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்போசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி சுசூகி, ஐடிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல் ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் உயர்வில் இருந்தன. கோடாக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, நெஸ்ட்லே இந்தியா, பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், சன்பார்மா பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in