Published : 19 May 2023 07:37 AM
Last Updated : 19 May 2023 07:37 AM

எஸ்பிஐ நிகர லாபம் 83 சதவீதம் உயர்வு

கோப்புப்படம்

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) பங்குச்சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2022-23-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் எஸ்பிஐ-யின் வட்டி வருவாய் 31% அதிகரித்து ரூ.92,951 கோடியானது. இதையடுத்து வங்கியின் நிகர லாபம் 83% உயர்ந்து ரூ.16,694.51 கோடியை எட்டியது.

2022-23-ம் முழு நிதியாண்டில் எஸ்பிஐ ரூ.50,232.45 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2021-22 நிதியாண்டில் ஈட்டிய லாபமான ரூ.31,675.98 கோடியுடன் ஒப்பிடுகையில் 59% அதிகம் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x