Published : 15 May 2023 10:17 AM
Last Updated : 15 May 2023 10:17 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 254 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்வடைந்து 62,200 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 18,360 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இந்த வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:01 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 254.67 புள்ளிகள் உயர்வடைந்து 62,282.57 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 48.55 புள்ளிகள் உயர்ந்து 18,363.35 ஆக இருந்தது.

ஏப்ரல் மாத சில்லறை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைந்தது, உலகளாவிய சந்தைகளின் அமைதியான போக்கு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x