Published : 08 May 2023 06:10 PM
Last Updated : 08 May 2023 06:10 PM

சென்செக்ஸ் 709 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 709 புள்ளிகள் (1.16 சதவீதம்) உயர்வடைந்து 61,764 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 195 புள்ளிகள் (1.08 சதவீதம்) உயர்ந்து 18,264 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 465.19 புள்ளிகள் உயர்வடைந்து 61,519.48 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 109.45 புள்ளிகள் உயர்ந்து 18,178.45 ஆக இருந்தது.

மந்தநிலை தொடர்பான அச்சம் நீங்கியதன் காரணமாக அமெரிக்கச் சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றம் பெற்றது. அதன் காரணமாக உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல், நிதி மற்றும் வங்கிப்பங்குகளின் உயர்வு காரணமாக இந்திய பங்குசந்தைகளும் இந்த வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்தன.

வெள்ளிக்கிழமை ஒரு மாதத்தில் அதிகபட்ச ஒருநாள் வீழ்ச்சியுடன் நிறைவடைந்திருந்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் எழுர்ச்சி பெற்று அதிகபட்ச ஒருநாள் ஏற்றத்துடன் 1 சதவீம் உயர்வடைந்து நிறைவு பெற்றது. மருந்துபொருளகள் மற்றும் கட்டுமான பங்குகளைத் தவிர பிற பங்குகள் உயர்வடைந்திருந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 709.96 புள்ளிகள் உயர்வடைந்து 61,764.25 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 195.40 புள்ளிகள் உயர்ந்து 18,264.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எம் அண்ட் எம், மாருதி சுசூகி, கோடாக் மகேந்திரா, என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீஸ், பாரதி ஏர்டெல், டெக் மகேந்திரா, டிசிஎஸ், ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், டைட்டன் கம்பெனி, விப்ரோ, ஏசியன் பெயின்ட் பங்குகள் உயர்வில் இருந்தன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x