Published : 08 May 2023 10:12 AM
Last Updated : 08 May 2023 10:12 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 465 புள்ளிகள் உயர்வு 

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்வடைந்து 61,372 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 18,156 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 465.19 புள்ளிகள் உயர்வடைந்து 61,519.48 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 109.45 புள்ளிகள் உயர்ந்து 18,178.45 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளின் இந்த வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், எம் அண்ட் எம் பங்குகள், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், கோடாக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விப்ரோ, மாருதி சுசூகி, ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி, விப்ரோ, டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், டெக் மகேந்திரா பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x