Published : 05 May 2023 10:17 AM
Last Updated : 05 May 2023 10:17 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 266 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 358 புள்ளிகள் சரிவடைந்து 61,390 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 89 புள்ளிகள் சரிந்து 18,166 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கின. காலை 09:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 266.49 புள்ளிகள் சரிவவடைந்து 61,482.76 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 79.00 புள்ளிகள் சரிந்து 18,176.80 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய பாதகமான சூழல், ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் அமெரிக்க வங்கிகள் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளின் வார இறுதி வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்டி, ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், மாருதி சுசூகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா மோட்டார், எம் அண்ட் எம் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஏசியன் பெயின்ட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, இன்போசிஸ், பாரதி ஏர்டெல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x