Published : 03 May 2023 10:05 AM
Last Updated : 03 May 2023 10:05 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 253 புள்ளிகள் சரிவு

கோப்புப்படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 270புள்ளிகள் சரிவடைந்து 61,150 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 72 புள்ளிகள் சரிந்து 18,075 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 253.86 புள்ளிகள் சரிவடைந்து 61,100.85 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 82.45 புள்ளிகள் சரிந்து 18,065.20 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் எதிர்மறையான சூழல், பிற்பகல் வெளியாக உள்ள அமெரிக்காவின் நிதிக்கொள்கை அறிக்கை போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, இன்டஸ்இன்ட் பேங்க், ஐடிசி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, எல் அண்ட் டி, கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x