Published : 02 May 2023 06:00 PM
Last Updated : 02 May 2023 06:00 PM

சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 242 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயர்வடைந்து 61,354 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 82 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயர்ந்து 18,147 ஆக இருந்தது.

மூன்று நாள் விடுமுறைக்குப் பின்னர் திறந்த பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:47 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 299.86 புள்ளிகள் உயர்வடைந்து 61,412.30 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 88.30 புள்ளிகள் உயர்ந்து 18,153.30 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதமான சூழல், வலுவான காலாண்டு அறிக்கைகள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் 8வது நாளாக லாபத்தில் நிறைவடைந்தன. இருந்தும் முதலீட்டாளர்கள் புதன் கிழமை வெளியாகவிருக்கும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித அறிக்கைக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நிலையாக சென்ற இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 61.486 வரை உயர்ந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 242.27 புள்ளிகள் உயர்வடைந்து 61,354.71 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 82.65 புள்ளிகள் உயர்ந்து 18,147.65 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, என்டிபிசி, டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, இன்போசிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், விப்ரோ, எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர்ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x