Published : 02 May 2023 10:17 AM
Last Updated : 02 May 2023 10:17 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 299 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 248 புள்ளிகள் உயர்வடைந்து 61,360 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 18,139 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:47 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 299.86 புள்ளிகள் உயர்வடைந்து 61,412.30 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 88.30 புள்ளிகள் சரிந்து 18,153.30 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், சில நிறுவனங்களின் வலுவான காலாண்டு அறிக்கைகளை காரணமாக மூன்று நாள் விடுமுறைக்குப் பின்னர் திறந்த இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. பெரும்பான்மையான பங்குகள் லாபத்தில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், விப்ரோ, இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் பின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டைட்டன் கம்பெனி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. டாடா மோட்டார்ஸ், கோடாக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எம் அண்ட் எம், சன்பார்மா, ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x